தியாகதுருகம்: முடியனூர் ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவில் புணரமைப்புக்காக 40 லட்சம் ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்த போதி லும், அதிகாரிகள் பணிகளை துவக்காததால் பக்தர்கள் அதிருப்தியில் அடைந்துள்ளனர். தியாகதுருகம் அடுத்த முடியனூரில் நூற்றாண்டு பழமையான உண்ணாமலை அம்மன் உடனுறை ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை தீப திருவிழா விமர்சியாக நடக்கும்.இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் தினமும் நான்கு கால பூஜைகள் நடந்து வருகிறது. கோவிலின் மேற்கூரையில் 100 ஆண்டுகளுக்கு முன் கலைநயத்துடன் வரையப்பட்ட சுவாமி ஓவியங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கோவில் கட்டுமானம் சில இடங்களில் சேதமமாகி பொலிவிழந்த நிலையில் உள்ளது. கோவில் முன்புறம் உள்ள 16 கால் மண்டபத்தின் மேற்புறத்தில் சுண்ணாம்பு கலவையால் வடிக்கப்பட்டிருந்த சுவாமி சிலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதை புணரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். நிதி ஒதுக்கீடு:இந்து அறநிலையத்துறை மூலம் 6.30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஆண்டு கோவில் விமானம் புதுப்பிக்கப்பட்டது. கோவில் முழுவதும் செப்பனிட்டு புதுப்பிக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய அரசின் மூலம் 13 வது ஆவண பிரிவின் கீழ் இக்கோவிலை செப்பனிட்டு புதுப்பிக்கும் பணிக்காக 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன் இதற்கான டெண்டர் விட்ட நிலையில், இதற்கான பணிகளை துவக்கமால் காலம் கடத்தி வ ருகின்றனர். இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். இது பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பணியை துவக்கி விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.