கோவை : கோனியம்மன் கோவில் திருவிழாவுக்காக, தேர் மராமத்துப்பணிகள் துவங்கியுள்ளன. கோனியம்மனுக்கு இந்த ஆண்டு மார்ச், 4ல் தேர்த்திருவிழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. முன்னதாக பிப்., 17ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்குகிறது. பிப்., 24ம் தேதி அக்னிச்சாட்டு நடக்கிறது. மார்ச், 3ம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மார்ச் 4ம் தேதி கோனியம்மன் தேர்த்திருவிழா நடக்கிறது.முதற்பணியாக தேர் மராமத்துப்பணிகள் நேற்று துவங்கின. சக்கரங்கள், இடைச்சட்டங்கள் பழுது ஏதேனும் இருந்தால் அவை சரிசெய்யப்பட்டு, தேருக்கு வண்ணம்பூசி தயார் நிலையில் வைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளது. இதற்காக, தேரின் மேற்கூரை அப்புறப்படுத்தி, பணிகள் துவங்கின.