திருநள்ளார் சனி பகவான் கோவில் யானை ப்ரக்குருதிக்கு வரவேற்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2015 12:01
காரைக்கால்: திருநள்ளார் சனி பகவான் கோவில் ப்ரக்குருதி யானை மேட்டுபாளையம் புத்துணர்ச்சி முகாமிற்காக சென்று வந்த யானைக்கு இன்று வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்கு ஆசி வழங்கவும், விழாக்காலங்களில் சாமி புறப்பாடு சமயத்தில் உடன் செல்லவும் கோவில் நிர்வாகம் கடந்த 2011ம் ஆண்டு யானை வாங்கப்பட்டது. தற்போது தமிழக கோவில்களில் உள்ள யானைகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை புத்துணர்வு முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. இந்த முகாமில் திருநள்ளார் சனிபகவான் கோவில் ப்ரக்குருதி யானையும் பங்கு பெற புதுச்சேரி அரசு சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது.இதையெடுத்து திருநள்ளார் ப்ரக்குருதி யானை கோயம்பத்துõர் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் நடக்கும் முகாமிற்கு கடந்த 12ம் தேதி இரவு புறப்பட்டது. யானையுடன் 2 பாகங்களும் சென்றனர்.இந்நிலையில் நேற்று அதிகாலை தேக்கம்பாட்டியிலிருந்து ப்ரக்குருதி யானை புத்துணர்ச்சி முகாமிக்கு சென்று விட்டு திருநள்ளார் கோவிலுக்கு திரும்பியது. யானைக்கு வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெறவேண்டியது. ஆனால் நாள் சரியில்லை என்பதால் இன்று யானைக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.