பதிவு செய்த நாள்
30
ஜன
2015
10:01
சைதாப்பேட்டை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் உள்ள தெப்பக் குளம் புதுப்பிக்கப்பட்டு, பிப்,, 2ம் தேதி, அதற்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவில் அருகே, கோவிலுக்கு சொந்தமான, தெப்பக்குளம் உள்ளது. சமீபத்தில், அந்த குளம் புதுப்பிக்கப்பட்டது. அதன் நீராழி மண்டபம் புதுப்பிக்கப்பட்டு, வண்ணம் பூசப்பட்டது. அதையடுத்து, பிப்., 2ம் தேதி, குளத்திற்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அதற்காக, வரும், ௩௧ம் தேதி மாலை, 5:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் பூஜைகள் துவங்குகின்றன.பிப்., 2ம் தேதி காலை, 6:30 மணிக்கு யாகசால பூஜை, 9:05 மணிக்கு சங்கல்பம், யாத்ராதானம், 9:30 முதல் 10:15 மணிக்குள், கும்பாபிஷேகம் நடக்க உள்ளன. பிப்., 3,4,5 ஆகிய தேதிகளில், தெப்பக்குளத்தில், தைப்பூச தெப்பத் திருவிழா நடக்க உள்ளது.