பதிவு செய்த நாள்
30
ஜன
2015
10:01
மயிலாப்பூர்: மயிலாப்பூர், வெள்ளீசுவரர் கோவிலில், பிப்., 2ம் தேதி அன்று, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில், காமாட்சி அம்மன் உடனுறை வெள்ளீசுவரர் கோவில் உள்ளது. அங்கு, சமீபத்தில் திருப்பணிகள் முடிந்த நிலையில், நேற்று முன்தினம், விநாயகர் பூஜை துவங்கியது. இன்று மாலை 4:30 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை துவங்குகிறது. பிப்., 2ம் தேதி, காலை 9:00 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜை துவங்குகிறது. அன்று காலை, 9:30 மணிக்கு, ராஜகோபுரம், விமானங்களுக்கும், 9:45 மணிக்கு வெள்ளீசுவரர் உள்ளிட்ட மூலவர்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அன்று இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 9:00 மணிக்கு, பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்க உள்ளன.