பதிவு செய்த நாள்
30
ஜன
2015
11:01
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை மலைப்பாதை சமீபத்தில் பெய்த மழையால் சேதமடைந்தள்ளது. இதில், பக்தர்கள் அபாய பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். நாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பாலமலையில் பெரும்பதி, பெருக்குப்பதி, மாங்குழி, பசுமணி உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. நுாற்றுக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இது தவிர, பிரசித்திபெற்ற பாலமலை ரங்கநாதர் ÷ காவில் உள்ளது. மருதமலை போல பிரபலமடைந்து வரும் இக்கோவிலில் தினசரி பூஜைகள் நடந்து வருகின்றன. தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். மலைவாழ் மக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ‘பாரத பிரதமர் கிராமசாலைகள் இணைப்பு திட்டத்தில்’ ஒரு கோடி ரூபாய் செலவில் பாலமலை அடிவாரத்தில் இருந்து குஞ்சூர்பதி வரை தார்சாலை அமைக்கப் பட்டது.
சமீபத்தில் பெய்த மழையால், இம்மலைப்பாதை கடும் சேதமடைந்துள்ளது. பாதையின் ஓரத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், செங்குத்தான பாதையில் ஏறும் வாகனங்கள் சறுக்கிவிழுந்து விபத்தில் சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பாலமலை மக்கள் கூறுகையில், மலைப்பாதையில் காலை, இரு முறை, மாலை ஒரு முறை மட்டும் பஸ் போக்குவரத்து உள்ளது. ஆனால், அந்த பஸ்சும் சரியான நேரத்துக்கு வருவது இல்லை. கோவனுாரில் இ ருந்து பாலமலை செல்ல, ஜீப் பிரதான போக்குவரத்து வாகனமாக பயன்படுகிறது. கோவனுார் பஸ் ஸ்டாண்டில் இருந்து பாலமலை போக, வர நபர் ஒன்றுக்கு, 50 ரூபாய் வசூல் செய்கின்றனர். அன்றாட ஜீவனத்துக்கே திண்டாடும் மலைவாழ் மக்களால் தினசரி, 50 ரூபாய் கொடுத்து ஜீப்பில் செல்ல முடிவதில்லை. தற்போது இயங்கி வரும் பஸ்சை, இன்னும் கூடுதலாக இயக்க போக்குவரத்து துறை முன் வர வேண்டும். அதே போல, ஜீப்பில் பய ணிப்பவர்கள் பாதுகாப்பாக செல்ல மலைப்பாதையை விரைவாக செப்பனிட்டு, சீர்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.