தைப்பூசத்தையொட்டி 3ம் தேதி மதுபானக் கடைகள் மூட உத்தரவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2015 11:01
கடலூர்: வடலூர் தைப்பூசத்தையொட்டி அனைத்து மதுபானக் கடைகளும் மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மதுபான (சில்லரை விற்பனை) விதி எண்.12ன் படி வரும் 3ம் தேதி தைப்பூசத் திருவிழாவையொட்டி மாவட்டத்தில் உள்ள எல்லா அரசு மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களில் மதுபானங்கள் விற்கப்படாமல் மூடியிருக்க வேண்டும். எனவே, டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில்லரை மதுபானக் கடைகளின் மேற்பார்வையாளர்கள், எல்.எல்.2 ரெக்ரியேஷன் கிளப், எப்.எல்.3 ஹோட்டல் பார், எப்.எல்.3 ஏஏ டூரிசம் சென்டர் ஆகிய உரிமைதாரர்கள் 3ம் தேதி ஒரு நாள் மட்டும் இம் மாவட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் மது விற்பனை நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதனை மீறி எவரேனும் மதுபான கடைகளை திறந்து மதுபானங்கள் விற்றாலோ மற்றும் மது அருந்தும் கூடங்களைத் திறந்து வைத்திருந்தாலோ சம்மந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர், டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டல் பார் உரிமைய õளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.