பதிவு செய்த நாள்
31
ஜன
2015
11:01
மதுரை, கோயில் நகரம் மட்டுமல்ல கடம்ப மரங்கள் நிரம்பிய கடம்பவனமாகவும் இருந்தது என்பது நமக்கு தெரிந்த செய்தி தான். இந்த புனிதமான கடம்ப மரங்கள் இன்றும் ஒருசில இடங்களில் வரலாற்று சுவடுகளை சுமந்து கொண்டு நிற்கிறது. அறியாமல் போன அரிய மரங்களின் பட்டியலில் சேராமல் கடம்ப மரங்களை வளர்க்கவும், பாதுகாக்கவும் ஒருசில நல்ல உள்ளங்கள் முன்வந்துள்ளதால் தான் இம்மரங்கள் மீண்டும் உயி ர்பெற்றுள்ளது.
மதுரை திருப்பாலை கிராமம் அன்பு நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர், அப்பகுதியில் வளர்ந்திருந்த கடம்ப மரத்தை அடையாளம் கண்டு வளர்த்து வருவதோடு மரத்தின் கீழே விநாயகர் சிலையை நிறுவி கோயிலாகவே மாற்றிவிட்டனர். சக்தி கடம்ப விநாயகர் கோயில் என்ற பெயரில் வீற்றிருக்கும் விநாயகர், பக்தர்கள் வேண்டிய வரத்தை வழங்கும் வள்ளலாக திகழ்கிறார். கோயில் அர்ச்சகர் குருமூர்த்தி, சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: இக்கோயிலில் ஒவ்வொரு சங்கடகர சதுர்த்தியிலும் விநாயகருக்கு விசேஷ பூஜைகள் தவிர தினசரி பூஜைகளும் நடக்கிறது. விநாயகர் வந்த பின் கடம்ப மரம் நன்றாக வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது, என்றனர்.