பதிவு செய்த நாள்
31
ஜன
2015
11:01
காங்கேயம்: காங்கேயம் அருகே, பொத்தியபாளையத்தில் உள்ள அன்ன காமாட்சியம்மன் கோவிலில், கோடி அர்ச்சனை பெருவிழா நடந்தது. இக்கோவிலில், கடந்த, 19ம் தேதி துவங்கி கும்பாபிஷேக முதலாண்டு நிறைவு விழா மற்றும் கோடி அர்ச்சனை பெருவிழா தொடர்ந்து நடந்து வருகிறது. இதில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் இரண்டாம் ஸ்தானீகர் ராஜாபட்டர் தலைமையில், சிவாச்சாரியார்கள் அர்ச்சனை செய்து வந்தனர். நேற்று முன்தினம் வரை, 1.15 கோடி அர்ச்சனைகள் நடைபெற்றதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். நேற்று அன்ன காமாட்சி அம்பிகைக்கு கலச அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பூசாரியார் கோபால்சாமி, கோவில் நிர்வாகிகள் கோபால், குழந்தைசாமி, மாணிக்கம், சம்பத், துரைராஜ், வரதராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.