சேலம்: சேலம் கோட்டையில் நேற்று இரவு பஞ்ச கருட சேவை நிகழ்ச்சி சிறபாக நடைபெற்றது. பஞ்ச கருட சேவையில் சேலம் செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள், அம்மாபேட்டை பாவநாரயண சுவாமி, சின்ன திருப்பதி வெங்கடேச பெருமாள், சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி, இரண்டாவது அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.