பதிவு செய்த நாள்
31
ஜன
2015
11:01
வால்பாறை: வால்பாறையில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வால்பாறை சுப்பிரமணியசுவாமி கோவில், 10ம் ஆண்டு தைபூசத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமமும், 7:00 மணிக்கு அபி?ஷக பூஜையும், 7:30 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தன. காலை, 9:00 மணிக்கு தைப்பூசவிழாக்குழு தலைவர் மதனகோபால் தலைமையில் திருக்கொடி ஏற்றப்பட்டது. விழாவில் பிப்., 2ம் தேதி மாலை, 4:00 மணிக்கு முருகன், வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. பிப்., 3ம் தேதி காலை, 10:00 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து அண்ணாநகர் இளைஞர்களின் சார்பில், அங்க அலகுகாவடி மற்றும் பறவைக்காவடியும், பால்குடமும் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வருகின்றனர். தொடர்ந்து காலை, 11:30 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழாவும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, தைப்பூசத்திருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.