பத்ரகாளியம்மன் கோவில் தீமிதி உற்சவம்: பக்தர்கள் நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2015 05:01
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியில் பிரசித்தி பெற்ற பத்ர காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் தை மாதம் 2வது வெள்ளி கிழமை தொடங்கி 10 நாட்களுக்கு உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு உற்சவம் கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய திருவிழாவான தீமிதி உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று காலை பத்ர காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. 10 மணிக்கு பக்தர்கள் பால் குடம் மற்றும் காவடிகள் எடுத்து வந்து அம்பாளை தரிசனம் செய்தனர். 3 மணிக்கு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு குண்டத்தில் தீ போடப்பட்டது. மாலை 4 மணிக்கு பச்சை காளி, பவள காளி வீதியுளா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் காளிக்கு உயிர் கோழிகளை நேர்த்தி கடனாக செலுத்தின ர். இரவு 10 மணிக்கு கழுமலை ஆற்றிலிருந்து சக்தி கரகம் மற்றும் காவடிகள் எடுத்து வரப்பட்டு 11 மணிக்கு தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதில் பல்வேறு கிராமங்களில் இருந்துவந்திருந்த திரளான பக்தர்க ள் கலந்துகொண்டு தீமிதித்து, பத்ர காளியம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து விடிய விடிய அம்பாள் வீதியுளா காட்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை நிர்வாக குழு தலைவர் ராஜேந்திரன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். சீர்காழி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.