தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற நிலைக்கு காலம் கனியும். கேது, செவ்வாய் ஆகிய கிரகங்கள் நன்மை தரக் காத்திருக்கிறார்கள். சூரியன் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். சுக்கிரன் பிப். 17 க்கு பிறகும், புதன் மார்ச்3க்கு பிறகும் நன்மை வழங்குவர். இதனால், நினைத்தது எளிதில் நிறைவேறும். பணப் புழக்கம் கையில் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டாகும். புதன் மார்ச் 3 வரை சாதகமற்ற இடத்தில் இருப்பதால் மனதில் குழப்பம் நேரலாம். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். வேண்டாதவர்களின் சேர்க்கையால் பணம் விரயமாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் நடப்பர். கணவன்- மனைவி இடையே அன்பு பெருகும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.
தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். மார்ச் 3 க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் லாபம் கூடும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பணியாளர்கள் சீரான முன்னேற்றம் காண்பர். அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. சிரத்தை எடுத்தால் கோரிக்கை எளிதில் நிறைவேறும். மார்ச் 3க்கு பிறகு திறமை பளிச்சிடும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பண வரவு இருக்கும். அரசியல்வாதிகள் திருப்தியுடன் பணியாற்றுவர்.
மாணவர்களுக்கு, மார்ச் 3க்கு பிறகு சிறந்த நிலை காணலாம்.
விவசாயிகள் நல்ல மகசூல் காணலாம்.
பெண்களுக்கு குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும்.
நல்ல நாள்: பிப். 13, 19, 20, 21, 22, 25, 26 மார்ச் 2, 3, 9, 10, 11, 12, 13
கவன நாள்: பிப். 15,16 மார்ச் 14 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: சிவப்பு, செந்துõரம்
வழிபாடு: வியாழனன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். மார்ச் 3 வரை புதன் பகவானுக்கு அர்ச்சனை செய்து பாசி பயறு தானம் செய்யலாம்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »