பதிவு செய்த நாள்
11
பிப்
2015
05:02
துணிவே துணை என முழங்கிடும் சிம்ம ராசி அன்பர்களே!
இந்த மாதம் சுக்கிரன் பிப். 17க்கு பிறகு நன்மை தருவார். புதன்மார்ச் 4 வரை நல்ல இடத்தில் இருக்கிறார். சந்திரனும் பெரும்பாலான நாட்கள் நன்மை தருவார். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் எந்த பின்னடைவும் ஏற்படாது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். மார்ச் 3 க்கு பிறகு குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவி வகையில் பிரிவு ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். வீட்டிற்குத் தேவையான வசதி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் நன்மை கிடைக்கும். சூரியனால் அலைச்சல் அதிகரிக்கும்.
தொழில், வியாபாரத்தில் கடந்த காலத்தில் இருந்த பிரச்னை அடியோடு விலகும். அதற்கு சுக்கிரன் பிப். 17ல் இடம் மாறுவதே காரணம் . அதன்பின் வளர்ச்சி உண்டாகும். புதிய தொழில் மூலம் நல்ல லாபம் சேரும். செவ்வாயால் எதிரி தொல்லை வரலாம். இருந்தாலும் அதை முறியடிக்கும் வல்லமையும் இருக்கும். பணியாளர்களுக்கு விரைவில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மார்ச் 3க்கு பிறகு அதிக அக்கறை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். சகபணியாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவே கிடைக்கும்.
கலைஞர்கள் பெண்கள் வகையில் ஒதுங்கி இருக்கவும் பிப். 17க்கு பிறகு உற்சாகமான பலன் காண்பர். மக்கள் மத்தியில் பாராட்டு கிடைக்கும்.
அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி காண்பர். மாணவர்கள் புதனின் அருளால் நற்பலன் காணலாம். மார்ச் 3 க்கு பிறகு சுமாரான நிலை ஏற்படலாம்.
விவசாயிகள் பொருளாதார வளத்தில் சிறப்படைவர். வழக்கு விவகாரத்தில் ஓரளவு சாதகபலன் கிடைக்கும்.
பெண்கள் கணவரின் அன்பு கிடைக்கப் பெறுவர். பிள்ளைகளால் மகிழ்ச்சி கூடும்.
நல்ல நாள்: பிப். 17, 18, 19, 20, 25, 26, 27, 28, மார்ச் 1, 4, 5, 6, 9, 10, 11
கவன நாள்: பிப். 21, 22 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 6, 7 நிறம்: வெள்ளை, பச்சை
வழிபாடு: செவ்வாய்க்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். காளி வழிபாடு உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.