கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1.2) ஆரோக்கியம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2015 05:02
நண்பர்களை மதித்து நடக்கும் கன்னி ராசி அன்பர்களே!
சூரியன், குரு,சனி ஆகியோர் மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். மார்ச் 4 முதல் புதனும் நன்மை தரக் காத்திருக்கிறார். பணப்புழக்கம் நல்ல முறையில் இருக்கும். மக்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் மேம்படும். ஆரோக்கியம் சீராகும்.குடும்பத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். மாத தொடக்கத்தில் அலைச்சல் அதிகரிக்கும். மார்ச் 4-ந் தேதி முதல் புதனால் நன்மை அதிகரிக்கத் தொடங்கும். புதிய முயற்சி வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்வீர்கள். உறவினர்களிடம் சற்று ஒதுங்கி இருப்பது நன்மையளிக்கும்.
தொழில், வியாபாரத்தில் பகைவர் தொல்லை மறையும். தொழில் ரீதியாக வெளியூர் சென்றவர்கள் மார்ச் 3க்கு பிறகு வீடுதிரும்புவர். சந்திரனின் அருளால் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். பணியாளர்கள் மாத தொடக்கத்தில் அதிக அக்கறை எடுத்து பணியாற்றுவது நல்லது. மார்ச் 3க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கும்.
கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடை பிப். 17க்கு பிறகு மறையும். ஆனால் அதன்பிறகு பெண்கள் வகையில் தொல்லை குறுக்கிடலாம். ஒதுங்கி இருக்கவும் .
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை பெற முடியாது.
மாணவர்களுக்கு மார்ச் 3க்கு பிறகு புதனும் சாதகமாக இருப்பதால் நன்மை சேரும்.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை காணலாம். புதிய சொத்து திட்டம் தள்ளி போகும்.
பெண்களுக்கு அக்கம் பக்கத்தினர் வகையில் தொல்லை உருவாகலாம். மார்ச் 3 வரை குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அதன்பிறகு தடைபட்டு வந்த திருமணம் நல்ல முறையில் நடைபெறும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.