மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2,) கடவுளின் கருணை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2015 05:02
எண்ணத்தைச் செயலாக்கும் மகர ராசி அன்பர்களே!
இந்த மாதம் கேது, குரு,சனி ஆகியோரால் கிடைத்து வரும் நற்பலன்கள் தொடரும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். முயற்சிகள் வெற்றி அடையும். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிப். 13,14 மார்ச் 12,13ல் குடும்ப சுகம் மேம்படும். பிப். 17,18ல் பெண்களால் நற்பலனை எதிர் நோக்கலாம். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். அரசின் சலுகை கிடைக்கும். பிப்ரவரி 15,16,19,20ல் சிற்சில தடைகள் வரலாம். பிப். 27,28ல் பணவரவு இருக்கும். பகைவர்களை எதிர்த்து வெற்றிகொள்ளும் ஆற்றல் இருக்கும்.உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். எனினும், குரு,சுக்கிரனால் உங்களின் சலுகை எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. பதவி உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். மார்ச் 3க்கு பிறகு உத்தியோகம் பார்ப்பவர்கள் இடமாற்றம் காணலாம்.கோரிக்கைகள் நிறைவேறும். மார்ச் 9,10,11-ல் உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
அரசியல்வாதிகள், நல்ல பலன் எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்கு குரு சாதகமாக காணப்படுவதால் மிக சிறப்பான முன்னேற்றம் காணலாம்.
விவசாயிகள் எள், கரும்பு, கோதுமை, பழவகை மூலம் நல்ல வருமானம் பெறுவர். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள் பிப். 21,22ல் புத்தாடை அணிகலன் வாங்கலாம். கடவுள் அருளால் புண்ணிய தலத்துக்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டும். உடல் நலம் சுமாராக இருக்கும்.
நல்ல நாள்: பிப். 13, 14, 17, 18, 21, 22, 27, 28, மார்ச் 1, 2, 3, 9, 10, 11, 12, 13.
கவன நாள்: மார்ச் 4, 5, 6 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 3,4 நிறம்: சிவப்பு, வெள்ளை.
வழிபாடு: சூரியனை காலையில் வணங்குங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள்.ராகு காலத்தில் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.
மேலும்
பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »