கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) எதிர்பாராத பணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2015 05:02
மனதில் பட்டதை வெளிப்படுத்தும் கும்ப ராசி அன்பர்களே!
இந்த மாதம் சுக்கிரன் தொடர்ந்து நன்மை தர காத்திருக்கிறார். பெண்களால் நன்மை அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று மகிழ்வீர்கள். பிப். 17க்கு பிறகு பொருளாதாரம் மேம்படும். சமூகத்தில் மதிப்பு கூடும். அரசு வகையில் சலுகை கிடைக்கும். சந்திரனின் சஞ்சாரத்தால் பெரும்பாலும் நன்மை உண்டாகும். குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். சுக்கிரனால் மார்ச் 12க்கு பிறகு குடும்ப சந்தோஷம் கூடும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். புதியவர்களை நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். போட்டியாளர் வகையில் பிரச்னை குறுக்கிடலாம். மார்ச் 2,3ல் எதிர்பாராமல் பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் விழிப்புடன் பணியாற்றுவது அவசியம். பிறர் உதவியை எதிர்பார்க்காமல் தன்கையே தனக்குதவி என உழைப்பது நல்லது. அதிகாரிகளின் ஆதரவு ஓரளவே கிடைக்கும். மார்ச் 13க்கு பிறகு பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
கலைஞர்களுக்கு சுக்கிரன் சாதகத்தால் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் பலன் கருதாமல் எதிர்காலம் கருதி பாடுபட நேரிடும். மாணவர்களுக்குச் சுமாரான காலகட்டம். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்பது நன்மையளிக்கும்.
விவசாயிகள் காய்கறி, கீரை வகைகள், பழவகைகள் போன்ற பயிர்களில் நல்ல மகசூலும், ஆதாயமும் காணலாம்.
பெண்கள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு காண்பர். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் வந்து சேரும். மாத பிற்பகுதியில் விருந்து விழா என சென்று வருவீர்கள்.
நல்ல நாள்: பிப். 13, 14, 15, 16, 19, 20, 23, 24 மார்ச் 2, 3, 4, 5, 6, 12, 13, 14
கவன நாள்: மார்ச் 7, 8 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 5,7 நிறம்: வெள்ளை, ஊதா
வழிபாடு: சனி, குருவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தியை தினமும் வழிபடுங்கள். காலையில் சூரியனை தரிசியுங்கள்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »