சுமங்கலிப் பெண்கள் தலையை மொட்டையடிக்க கூடாது என்கிறது சாஸ்திரம். நேர்த்திக் கடனாக கோயிலுக்கு முடி செலுத்த விரும்பினால், தலை வாரிப் பின்னலிட்டு, பூச்சூடி கணவரின் அனுமதியுடன், முடியின் நுனி பாகத்தை சிறிதாக வெட்டி கொடுக்கலாம். இதற்கு பூ முடி தானம் என்று பெயர். வடநாட்டு யாத்திரையில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சேரும் திரிவேணி சங்கமத்தில் பூ முடி காணிக்கை கொடுப்பது சிறப்பு. படகில் ஏறிக்கொண்டு பிரயாகையில் வேணி தானம் (முடி தானம்) செய்யும் எனக்கு பாவம் எல்லாம் நீங்கி சவுபாக்கியம் உண்டாக வேண்டும் என்று பிரார்த்தித்து வெற்றிலை, பாக்குக்குடன் முடியையும் வைத்து வேதியருக்கு தானம் கொடுக்க வேண்டும்.