புதுச்சேரி: பூமியான்பேட்டையில் உள்ள ராகவேந்திரர் கோவிலில், ராகவேந்திரருக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது. ராகவேந்திரரின் 419வது ஜெயந்தியையொட்டி, நேற்று காலை காராமணிக்குப்பம் முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு, ராகவேந்திரர் கோவிலை அடைந்தது. அங்கு, ராகவேந்திரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.