திருப்பூர் : திருப்பூர் பார்க் ரோடு, மிருத்திகா பிருந்தாவன சன்னதியில், ராகவேந்திரர் அவதரித்த தின சிறப்பு ஹோமம் நடைபெற்றது. திருப்பூர் பார்க் ரோடு, ராய கணபதி, பிரஹலாதர் சமேத லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர் சமேத சீதாராமர், கிருஷ்ணர் சமேத குரு ராகவேந்திர சுவாமிகள் மிருத்திகா பிருந்தாவன சன்னதி உள்ளது. இங்கு, ராகவேந்திரர் அவதரித்த புண்ணிய தினவிழா, சிறப்பு பூஜை நேற்று நடந்தது.காலை 6:00க்கு கோபூஜை; 7:00க்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 8:00க்கு லட்சுமி நரசிம்மர், சீதாராமர் மற்றும் குருராகவேந்திரர் சிறப்பு ஹோமம் மற்றும் 108 சங்கு பூஜை மற்றும் ராகவேந்திரர் அஷ்டாக்ஷா யந்திரம் வைத்து பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, குரு ராகவேந்திரர் மகிமை குறித்து சொற்பொழிவு, மகா தீபாராதனை நடந்தது.