கோவை : கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு புலி வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. திரளாக பங்கேற்ற பக்தர்கள் முன்னிலையில், சோதனைகளாக்கி வெற்றிகாணப் பெரிதும் தேவை - தன்னம்பிக்கையே!, உழைப்பே! எனும் தலைப்பில், சிறப்பு பட்டிமன்றமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கவிஞர் மானுார் புகழேந்தி நடுவராக பங்கேற்க, தன்னம்பிக்கையே எனும் தலைப்பில் சாமுவேல், தனமணி மற்றும் ஈஸ்வரி, உழைப்பே எனும் தலைப்பில் கனிமொழி, சூர்யகலா மற்றும் ரமேஷ் பேசினர். தொடர்ந்து, இரவு 7:30 மணிக்கு, எலைட் உலக சாதனையாளர் சேகரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.