திருவாரூர்: திருவாரூர் சாய்புரம், வாசன் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்கந்தசாய் பாபா கோவில் மற்றும் தியான மண்டபம் கும்பாபிஷேகம் வரும் 8 ம் தேதி நடக்கிறது. ஜெய்பூரில் வடிமைக்கப்பட்டு, சீரடியில் பிரதிஷ்ட்டை செய்யப் பட்டுள்ள சாய்பாபா மற்றும் பரிபார தெய்வங்களை பக்தர்கள் வணங்கி வரு கின்றனர். திருவாரூர் சாய்புரம், வாசன் நகரில் ஸ்கந்தசாய் அறக்கட்டளை சார்பில் புதிதாக ரூ.85 லட்சம் செலவில் புதிதாக ஸ்கந்தசாய் பாபா கோவில் மற்றும் தியான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் 5அடி உயரத்தில் ஜெய்ப்பூரில் இருந்து ரூ.4.60 லட்சம் செல வில் பளிங்கு கல்லால் சாய்பாபா சிலை வடிவமைத்து, சீரடியில் பிரதிஷ் ட்டை செய்து திருவாரூர் கொண்டு வந்தனர். சாய்பாபாவுடன், பளிங்கு கல்லில் வெள்ளை வினாயகர், அகஸ்தியர், தத்தாத் ரேயர், ராதை–கிருஷ்ணர், நாகசுவாமி உள்ளிட்ட பரிவாரதெய்வ ங்களுடன் சிலை வடிமைக்கப்பட்டு தினசரி பூஜை நடந்து வருகிறது. வரும் 5ம்தேதி பல்வேறு பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா துவங்கி தினசரி பல்வேறு பூஜைகளும் 8 ம் தேதி காலை9.45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் ஆரத்தி நடக்கிறது.