வால்பாறை : வால்பாறையில் ஷீரடிசாய்பாபா துாவாரகாமாயி தியான மந்திரில் சிறப்பு பஜனை நடந்தது. வால்பாறை நகை கடை வீதியில், ஷீரடிசாய்பாபா துாவாரகாமாயி தியான மந்திர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது. இந்த கோவிலில் நாள் தோறும் காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. நேற்றுமுன்தினம் மாலை, 6:30 மணிக்கு நடைபெற்ற பூஜையில், பஜன் பாடல்களும், அலங்கார பூஜையும் இடம்பெற்றன. ஒருங்கிணைப்பாளர் சாய்செல்வரத்தினம் தலைமை வகித்தார்.