திண்டுக்கல்: சப்த ரிஷிகளில் ஒருவரான ஸ்ரீபரத்வாஜருக்கு திண்டுக்கல் அருகே உள்ள தவசிமேடை ஒடுக்கத்தில் ஆசிரமம் அமைந்துள்ளது. இங்குள்ள சன்னதியில் மகாலிங்கேஸ்வரரும், மாணிக்கவள்ளி, மரகதவள்ளியும் அருள்பாலிக்கின்றனர். 27 நட்சத்திரத்தில் மகம் நட்சத்திரத்திற்குரிய தலமான இங்கு மாசிமகம் தினமான 4.3.15 அன்று காலை 9.00 மணிமுதல் மாசி மகத்திற்குரிய சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு இறைவனின் அருள் பெறலாம்.
தலத்தின் சிறப்பு: வஷிஷ்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம். பரத்வாஜ மகரிஷியால் பூஜிக்கப்படும் லிங்கம். அகத்தியர் முதல் ஆயிரம் ஆயிரம் கோடி ஆயிரம் கோடி சித்தர்கள், மகரிஷிகள் மற்றும் முனிவர்களும் தவமியற்றி வழிபட்ட லிங்கம். இராமர் பரிவாரங்களுடன் பரத்வாஜ மகரிஷியை தரிசித்து விருந்துண்ட ஸ்தலம். சூரிய பகவான் தினமும் பூஜிக்கின்ற ஸ்தலம்.இங்குள்ள பைரவர் ஈசனுக்கு நேர் எதிரே ஆதிபைரவராக அருள்பாலிக்கும் ஒரே ஸ்தலம். புதியதாக கட்டப்பட்டு வரும் அன்னதான மண்டபத்தில் 3-3-15 அன்று காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமும் 4.3.15 அன்று அன்னதானமும் நடைபெறும்.
செல்லும் வழி: திண்டுக்கல்லிலிருந்து நத்தம் செல்லும் வழியில் உள்ள விராலிப்பட்டி பஸ்ஸ்டாப்பிலிருந்து தவசி மேடை ஒடுக்கத்தில் ஆசிரமம் அமைந்துள்ளது. தொடர்புக்கு: 95782 11659