பதிவு செய்த நாள்
02
மார்
2015
10:03
நாகர்கோவில்: பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், மாசிக்கொடை விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இக்கோவிலுக்கு, கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் விரதமிருந்து, இருமுடி ஏந்தி வந்து, கடலில் குளித்து அம்மனை வழிபடுவதால் இது, பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இங்கு வரும் பெரும்பாலான பக்தர்கள், அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு நடத்துகின்றனர். இங்கு, மாசிக்கொடை விழா10நாட்கள் நடைபெறும். இந்த விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.பூசாரிகள், கோவிலில் பூஜிக்கப்பட்ட திருக்கொடியை, மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர்; பின், கொடியேற்றினார். தொடர்ந்து, கொடி மரத்துக்கு தீபாராதனை நடைபெற்றது.