பதிவு செய்த நாள்
02
மார்
2015
11:03
ராமேஸ்வரம்: இலங்கை, கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவில், இந்தியா, இலங்கை பக்தர்கள், 6,500 பேர் பங்கேற்றனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து, 25 கி.மீ., துாரத்தில், பாக்ஜலசந்தி கடலில் அமைந்துள்ள, கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவை, இந் திய, இலங்கை மீனவர்கள் பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டு, பிப்., 28ம் தேதி, இலங்கை நெடுந்தீவு பாதிரியார் நேசநாயகம், கச்சத்தீவு சர்ச்சில் கொடி ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். அன்றிரவு, திருவிழா சிலுவை பாதை திருப்பலி பூஜையும், அலங்கார தேரில் அந்÷ தாணியார் எழுந்தருளியதும், தேர் பவனியும் நடந்தது. நேற்று காலை, இலங்கை யாழ்ப்பாணம் மறைமாவட்ட முதன்மை குரு ஜஸ்டின் ஞானபி ரகாசம் தலைமையில், திருவிழா திருப்பலி பூஜை நடந்தது. இதில், ராமேஸ்வரத்தில் இருந்து, 110 படகுகளில் சென்ற, 4,003 பேரும், இலங்கையில் இருந்து, 2,500 பக்தர்களும் பங்கேற்று, அருளாசி பெற்றனர். விழாவுக்கு, இந்திய கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, மாநில மரைன் போலீசார், இலங்கை கடற்படை வீரர்கள், பாதுகாப்பு அளித்தனர். விழா முடிந்ததும், இந்திய பக்தர்கள், நேற்று மதியம், 12:30 மணி முதல், ராமேஸ்வரம் கரைக்கு திரும்பினர்.