பதிவு செய்த நாள்
02
மார்
2015
11:03
திருப்போரூர்: திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்கு பின் நேற்று, தேர் திருவிழா விமரிசையாக நடந்தது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், 2013 - 14ம் ஆண்டுகளில் திருப்பணிகள் நடந்ததால், பிரம்மோற்சவ பெருவிழா நடத்தப்படவில்லை.இந்தாண்டு மாசிமாத பிரம்மோற்சவ பெருவிழா, பிப்ரவரி 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.புருஷாமிருகம், ஆட்டுக்கடா, வெள்ளி அன்னம், வெள்ளி மயில், யானை உள்ளிட்ட வாகனங்களில் கந்தபெருமான் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏழாம் நாள் திருவிழாவான நேற்று, தேரோட்டம் விமரிசையாக நடந்தது. தேரடியில் இருந்த தேரை, காலை 7:00 மணிக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மாடவீதிகள் வழியே சுற்றி வந்த தேர், பிற்பகல் 2:00 மணியளவில் நிலைக்கு வந்தது.ஆயிரக்கணக்கான பக்தர்கள், அரோகரா என, கோஷமிட்டு வந்தனர்.