பதிவு செய்த நாள்
04
மார்
2015
12:03
காரைக்கால்:காரைக்கால் நித்ய கல்யாணப் பெருமாள் கோவில் பிரமோற்சவ விழாவில், நேற்று தீர்த்தவாரி நடந்தது.நித்ய கல்யாண பெருமாள் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரமோற்சவ நாட்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து வருகிறது. தினந்தோறும் கருட வாகனம், அனுமந்த் வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடந்து வருகிறது. கடந்த 1ம் தேதி சிறப்பு திருமஞ்சனம், திருக்கல்யாணம் நடந்தது. அதைத் தொடர்ந்து வெண்ணைத்தாழி உற்சவம் நடந்தது.
நேற்று, தேர் திருவிழா நடந்தது. தேரில் உலா வந்த நித்ய கல்யாண பெருமாளுக்கு, அம்மையார் திருக்குளத்தில் சந்திர தீர்த்ததில் தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.