பழநி கோயிலில்.. கேரள, கர்நாடகா பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2015 11:03
பழநி: மாசித்திருவிழாவை முன்னிட்டு பழநி மாரியம்மன் கோயிலில் கேரள, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 ஆயிரம் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பலஆண்டுகளுக்கு முன் பழநியில் வாழ்ந்த இந்துயாதவ சமுதாயத்தினர் பழநி மாரியம்மன் கோயில் மாசிதிருவிழாவில் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அவர்களில் பெரும்பாலோர் கேரள மாநிலம் பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் வசிக்கின்றனர். இவ்வாண்டு மாரியம்மன்கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு அம்மாநில பக்தர்கள் 2 ஆயிரம் பக்தர்கள் வையாபுரிகுளம் அருகே படிப்பாறை காளியம்மன் கோயிலிருந்து தீச்சட்டி எடுத்துவந்து மாரியம்மன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தி, சிறப்புபூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.