நாகப்பட்டினம்: நாகையில் பிரசித்திப் பெற்ற தாய் மூகாம்பிகை கோவிலில் நேற்று நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாகை, ஆரியநாட்டுத் தெருவில் அமைந்துள்ளது பழமையான தாய் மூகாம்பிகை கோவில்.பிரசித்திப் பெற்ற இக்கோவிலின் பிரம்மோற்சவ விழா,கடந்த 1 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருத்தேரோட்டம் நடந்தது. அம்பாள் தேரில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து அம்பாளுக்கு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.