ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பதவி உயர்வு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2015 02:03
துல்லியமாக காய் நகர்த்தும் திறனுள்ள ரிஷப ராசி அன்பர்களே!
சூரியன்,கேது நன்மையை வாரி வழங்குவர். செவ்வாய் மார்ச் 21 வரையும், புதன் ஏப். 6 வரையும் நன்மை செய்வர். சுக்கிரன் ஏப். 7 ல் இருந்து நற்பலனைக் கொடுப்பார். பெண்களின் ஆதரவு பெருகும். பொன், பொருள் சேரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்திடும் சூழ்நிலை உருவாகும். வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். மார்ச் 25,26 தேதிகளில் பெண்கள் மூலம் கூடுதல் நன்மையை எதிர்பார்க்கலாம். விருந்து விழா என சென்று வருவீர்கள்.
தொழில், வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் அமோக வளர்ச்சி அடையும். ஏப். 6,7 தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் சிடைக்கும். ஏப். 6க்கு பிறகு எதிரியால் தொல்லை வரலாம். இருந்தாலும் தக்க பதிலடி கொடுப்பீர்கள்.
பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் எளிதில் நிறைவேறும். அரசு ஊழியர்களுக்கு அதிர்ஷ்டவசமாக பதவி உயர்வு கிடைக்கும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு மார்ச் 21க்குள் கோரிக்கை நிறைவேறும். மார்ச் 18,19 தேதிகளில் நல்ல செய்தி தேடி வரும்.
கலைஞர்களுக்கு ஏப். 7 வரை சிரத்தை எடுத்தே புதிய ஒப்பந்தம் பெறவேண்டி வரும். பிறகு புதிய ஒப்பந்தம் மளமளவென கிடைக்கும். அரசியல் வாதிகள் தொண்டர் மத்தியில் நற்பெயர் காண்பர்.
மாணவர்களுக்கு ஆசிரியர்களின் பாராட்டு கிடைக்கும். போட்டியில் வெற்றி காண்பர். ஏப்ரல் 6 க்கு பிறகு கவனம் தேவை.
விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது. புதிய சொத்து வாங்க மார்ச் 21 வரை சாதகமான காலகட்டம்.
பெண்கள் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர்.
நல்ல நாள்: மார்ச் 18, 19, 20, 21, 25, 26, 29, 30, 31
ஏப். 6, 7, 8, 9
கவன நாள்: மார்ச் 15 ஏப். 10, 11 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,7,9 நிறம்: பச்சை, வெண்மை
வழிபாடு: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏப். 7 வரை வீட்டில் விளக்கு ஏற்றி சுக்கிரனை வழிபடுங்கள்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »