பதிவு செய்த நாள்
10
மார்
2015
02:03
உற்சாக மனம் படைத்த கடக ராசி அன்பர்களே!
ராகுவால் மாதம் முழுவதும் நன்மை தொடரும். புதனால் மார்ச் 21 வரையும், ஏப். 6 க்கு பிறகும் நற்பலன் அதிகரிக்கும். சுக்கிரன் ஏப். 7 க்கு பிறகு நன்மை தர காத்திருக்கிறார். முயற்சியில் வெற்றி உண்டாகும். சூரியனால் சமூக மதிப்பு பாதிக்கப்படலாம். மாதத் தொடக்கத்தில் குடும்ப சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். கணவன் -மனைவி இடையே பாசம் மேலோங்கும். மார்ச் 21க்கு பிறகு ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுப்பது நல்லது. மார்ச் 25,26 தேதிகளில் உறவினர் வகையில் இனிய அனுபவம் ஏற்படலாம். ஆரோக்கியம் பலம் பெறும்.
தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும், லாபமும் கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். செவ்வாயால் மார்ச் 21க்கு பிறகு எதிரி தொல்லை ஏற்படும். மார்ச் 15 ஏப். 10,11 தேதிகளில் எதிர்பாராமல் வருமானம் கூடும். மார்ச் 27,28 ஏப். 1,2-ந் தேதிகளில் சந்திரனால் தடை வரலாம். ஏப்ரல் 6க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சி அடையும்.
பணியாளர்களுக்கு நிர்வாகம், அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மார்ச் 21க்கு பின், பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். மார்ச் 22,23,24 தேதிகளில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்.
கலைஞர்களுக்கு ஏப். 7 வரை எதிரி தொல்லை இருக்கும். பின் புதிய ஒப்பந்தம் விரைவில் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் நல்ல வருமானம் கிடைக்கப் பெறுவர்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். மார்ச் 21 முதல் ஏப். 6 வரை பெற்றோர் அறிவுரையை ஏற்பது அவசியம்.
விவசாயிகள், செலவு பிடிக்கும் பயிர்களைத் தவிர்க்கவும். வழக்கு விவகாரங்களில் மெத்தனம் கூடாது.
பெண்கள் குடும்பத்தின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வர். ஏப்ரல் 3,4,5 தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். அண்டை வீட்டார் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவர்.
நல்ல நாள்: மார்ச் 15, 16, 17, 22, 23, 24, 25, 26, 29, 30, 31 ஏப். 3, 4, 5, 10, 11, 12, 13
கவன நாள்: மார்ச் 18, 19 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4, 6 நிறம்: வெண்மை, நீலம்
வழிபாடு: பத்ரகாளிக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள். செவ்வாயன்று முருகனை வழிபட்டு ஏழைகளுக்கு துவரை தானம் செய்யுங்கள்.