பதிவு செய்த நாள்
10
மார்
2015
02:03
ஊக்கமுடன் உழைத்திடும் விருச்சிக ராசி அன்பர்களே!
குரு, ராகு இருவராலும் மாதம் முழுவதும் நன்மை கிடைக்கும். புதன் மார்ச் 21 வரையும், ஏப்.6க்கு பிறகும் நற்பலன் கொடுப்பார். செவ்வாய் மார்ச் 21 க்கு பிறகு வாழ்வில் நலம் சேர்ப்பார். குடும்ப வாழ்வு சிறக்கும். மாதத் தொடக்கத்தில் பொன், பொருள் சேரும். திருமண முயற்சி வெற்றி பெறும். புதுமணத் தம்பதியருக்கு ஏப். 6 க்கு பிறகு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன்- மனைவி இடையே பாச பந்தம் அதிகரிக்கும். ஏப். 8,9 ல் பெண்களால் நன்மை உண்டாகும்.
தொழில், வியாபாரத்தில் பின் தங்கியநிலை மாறும். வருமானம் பன்மடங்கு உயரும். செவ்வாய் 6ல் இடம் மாறுவதால் எதிரி தொல்லை மறையும். மார்ச் 21க்கு பின், தொழில் ரீதியாக அடிக்கடி வெளியூர் பயணம் ஏற்படலாம். மார்ச் 22,23,24 தேதிகளில் திடீர் வருமானம் கிடைக்கும்.
பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலைப்பளு குறையும். மார்ச் 21க்கு பிறகு போலீஸ், ராணுவத்தினர் உயர்ந்த நிலை பெறுவர். ஏப்.1,2 தேதிகளில் முன்னேற்றமான சம்பவம் நடக்கும். ஏப். 7க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு.
கலைஞர்கள் விடாமுயற்சியால் வாய்ப்பு கிடைக்கப் பெறுவர். ஏப்.7க்கு பிறகு பெண்களால் பிரச்னை உருவாகலாம் கவனம். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிக்கான வாய்ப்பு உருவாகும்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவர். போட்டிகளில் வெற்றி காணலாம். திட்டமிட்டுப் படித்து தேர்வுகளைச் சிறப்பாக எழுதுவர்.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ப வருமானம் காண்பர். கால்நடை மூலம் வளம் சேரும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் மார்ச் 21க்கு பிறகு கைகூடும்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். ஆடை, ஆபரணம் வாங்கலாம். மார்ச் 16,17, ஏப்.12,13 தேதிகளில் பணவரவுக்கு வாய்ப்புண்டு.
நல்ல நாள்: மார்ச் 16, 17, 22, 23, 24, 25, 26, ஏப். 1, 2, 3, 4, 5, 8, 9, 12, 13
கவன நாள்: மார்ச் 27,28 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 6,8 நிறம்: சிவப்பு, நீலம்
வழிபாடு: முருகன் கோவிலுக்கு செல்லுங்கள். புதனன்று குல தெய்வத்தை வழிபட்டு, பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். ராமநாமம் ஜெபியுங்கள்.