பதிவு செய்த நாள்
10
மார்
2015
02:03
நட்புக்கு முன்னுரிமை தரும் தனுசு ராசி அன்பர்களே!
சூரியன் சாதகமற்று இருந்தாலும், சுக்கிரனால் மாதம் முழுவதும் நற்பலன் அதிகரிக்கும். புதன் மார்ச் 21 முதல் ஏப்.6 வரை நன்மை கொடுப்பார். பக்தி மேலோங்கும். தொட்டதை சிறப்பாக முடிக்கும் ஆற்றல் உருவாகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். குடும்பத்தில் மார்ச் 21க்குப் பிறகு மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். ஏப். 6,7 ல் உறவினர் வருகையால் சந்தோஷம் ஏற்படும்.
தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும், லாபமும் கிடைக்கும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. வரவு-செலவு கணக்கை சரியாக வைக்கவும். மார்ச் 21 க்குப் பிறகு நிர்வாகச் செலவு குறையும். மார்ச் 25,26 தேதிகளில் எதிர்பாராமல் வருமானம் கூடும். ஏப். 6 க்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் செல்ல நேரிடும்.
பணியாளர்கள், மாதத் தொடக்கத்தில் பணிச்சுமையைச் சந்திப்பர். மாத இறுதியில் நிலைமை சீராகும். கோரிக்கை எளிதில் நிறைவேறும். ஏப்ரல் 3,4,5 தேதிகளில் சிறப்பு சலுகை கிடைக்கும். ஏப். 6 க்கு பிறகு பணி விஷயமாக குடும்பத்தை விட்டு பிரியலாம்.
மாணவர்கள் கல்வியில் முன்னேறுவர். தேர்வுக்காக கூடுதல் நேரம் படிப்பர். போட்டிகளில் வெற்றி காணலாம்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஏப்.7க்கு பிறகு முயற்சியில் தடை உருவாகும். அரசியல்வாதிகள் பிரதிபலனை எதிர்பாராமல் பாடுபடுவர்.
விவசாயிகள் உழைப்புக்கேற்ப வருமானம் காண்பர். கால்நடை வளர்ப்பில் ஆதாயம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்குவதை தள்ளிப் போடுவது நல்லது. நிலப்பிரச்னை நல்ல விதமாகத் தீரும்.
பெண்களுக்கு அக்கம் பக்கத்தினர் ஆதரவு கிடைக்கும். மார்ச் 18,19 தேதிகளில் பிள்ளைகளால் சந்தோஷ அனுபவம் ஏற்படும்.
நல்ல நாள்: மார்ச் 18, 19, 25, 26, 27, 28, ஏப்ரல் 3, 4, 5, 6, 7, 10, 11
கவன நாள்: மார்ச் 29, 30, 31 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,8 நிறம்: வெள்ளை, பச்சை
வழிபாடு: செவ்வாயன்று முருகனை வழிபடுங்கள். சாப்பிடும் முன் காக்கைக்கு அன்னமிடுங்கள். துர்க்கை, நாக தேவதையை தினமும் வணங்குங்கள்.