சுக்கிரனின் ஆதரவு மாதம் முழுவதும் சிறப்பாக இருக்கும். செவ்வாய் மார்ச் 21ல் சாதகமான இடத்திற்கு வருகிறார். கடவுளின் கருணையால் நிறைவான வாழ்வு அமையும். செயலில் வெற்றி உண்டாகும். பண பலம் அதிகரிக்கும். மற்ற கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் பாதிப்பு உண்டாகாது. குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். கணவன், மனைவி இடையே பாசபந்தம் உண்டாகும். புதுமணத் தம்பதியருக்கு மழலைச் செல்வம் வாய்க்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு கூடும். மார்ச் 18,19ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். மார்ச் 21க்கு பிறகு, புதிய சொத்து வாங்க யோகமுண்டு.
தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி காணலாம். ஏப். 6 க்குப் பிறகு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மார்ச் 29,30,31 தேதிகளில் எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.
பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மார்ச் 21க்கு பிறகு கடினமாக உழைக்க வேண்டிஇருக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்கும்.