கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திரம் துவங்கியது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2015 11:03
விருத்தாசலம்: கொளஞ்சியப்பர் சுவாமி கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் சுவாமி கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா நேற்று (25ம் தேதி) துவங்கி, வரும் 3ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து விநாயகர், கொளஞ்சியப்பர் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி, காலை 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இரவு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமானோர் தரினசம் செய்தனர். வரும் 2ம் தேதி தேரோட்டம், 3ம் தேதி பங்குனி உத்திரம், தீர்த்தவாரி நடக்கின்றன.