பதிவு செய்த நாள்
26
மார்
2015
02:03
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் செம்பனார்கோயிலை அடுத்த முக்கரும்பூர் கிராமத்தில் அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் கோயில் உள்ளது. இத்தலத்தில் இருந்து மார்கண்டேயர் மலர்களை எடுத்து சென்று திருக் கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரருக்கு அணிவித்து வழிபட்டதாக தலவரலாறு கூறுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 23ம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் யாகசாலை பூஜை தொடங் கியது.நேற்று காலை 7.30மணிக்கு 4ம் கால யாகபூஜை நடைபெற்று காலை 10.15மணிக்கு பூர்ணாஹூதி யாகி யாக சாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்தது. 11.45 மணிக்குள் சுவாமி, அம்பாள் மற்றும் லட்சுமி நாராயண பெருமாள், வினாயகர், முருகன், தட்சனாமூர்த்தி, நவக்கிரகங்கள், ஆஞ்சனேயர், சனீஸ்வரர் உள்ளிட்ட 11சன்னதி விமானங்களின் கலசங்கலு க்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து மூலவருக்கு மகாஅபிஷேகம் செய்யப்பட்டது. யாகசாலை பூஜை, கும்பாபிஷேகத்தை திருநன்றியூர் சுப்ரமணிய சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்க ள் செய்துவைத்தனர். இதில் லண்டன் நடராஜன், ராதா, சென்னை டெக்கான்மூர்த்தி, திருப்பணிக் குழு தலைவர் கிருஷ்ணராவ், யூனியன் கவுன்சிலர் கண்ணன் மற்றும் திருப்பணிக் குழுவினர், கிராம மக்கள், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.