Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளி காதல் தக்ஷிணகாளி கற்பூராதி ஸ்தோத்திரம்! தக்ஷிணகாளி கற்பூராதி ஸ்தோத்திரம்!
முதல் பக்கம் » மகா காளி வழிபாடு
காளியின் ஊழிக்கூத்து!
எழுத்தின் அளவு:
காளியின் ஊழிக்கூத்து!

பதிவு செய்த நாள்

26 மார்
2015
03:03

பிரளயம் வந்து பார்த்தவரில்லை, பிரபஞ்ச நாயகியாம் காளியின் ஊழிக்கூத்தை கண்டவர்களும் இன்றில்லை. அவள் ஆலங்காட்டிலே ஆடிய தாண்டவம் அரனா பொருட்டேயாகும். அவள் ஆடிய கூத்தை கண்டவர் சிலரும் அறியாத நமக்கு சொல்லவேயில்லை. அவள் ஆடலைக் காண இவ்வுலக மக்கள் ஏங்கிக் கொண்டிருந்த வேளையில், அந்த வீரமாகாளி ஆடவே செய்தாள். ஆடிய ஆட்டமோ ஊழிக்கூத்து. அதாவது காளி தாண்டவம் என்பார்களே அது. அக்காட்சியை பாட்டுக்கொரு புலவனாகிய பாரதி. தன் மனையாள் தங்கம்மாவை அழைத்து காட்டுகிறார். நாமும் அந்த ஊழிக்கூத்து எப்படியிருக்கிறது? என்று பார்ப்போமா?

1. வெடிபடுமண்டத் திடிபல தாளம்போட-வெறும்
வெளியிலிரத்தக் களியொடு பூதம் பாடப்-பாட்டின்
அடிபட பொருளுன் அடிபடு மொலியிற் கூடக் -களித்

தாடுங்காளீ, சாமுண்டீ; கங்காளீ!
அன்னை, அன்னை,
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

2. ஐந்துறுபூதம் சிந்திப் போயொன் றாகப்-பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக - அங்கே
முந்துறு மொளியிற் சிந்தை நழுவும் வேகத்தோடே

முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்
அன்னை, அன்னை.
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

3. பாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலையச்-சலனம்
பயிலும்சக்திக் குலமும் வழிகள் கலைய-அங்கே
ஊழாம் பேய்தான் ஓஹோ ஹோ வென்றலைய-வெறித்

துறுமித் திரிவாய், செருவெங்கூத்தே புரிவாய்.
அன்னை, அன்னை.
ஆடுங்கூத்தை நாடச் செய்தா யென்னை.

4. சக்திப்பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச்-சட்டச்
சடசடசட்டென் றுடைபடு தாளங்கொட்டி-அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல்போ யெட்டித் தானே

எரியுங் கோலங் கண்டேசாகும் காலம்
அன்னை, அன்னை.
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

5. காலத் தொடுநிர் மூலம்படு மூவுலகும்-அங்கே
கடவுள் மோனத் தொனியேதனியா யிலகும்-சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும்-கையைக்

கொஞ்சி தொடுவாய், ஆனந்தக் கூத்திடுவாய்
அன்னை, அன்னை.
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

காளிக்கு ஸமர்ப்பணம்

இந்த மெய்யும் கரணமும் பொறியும்
27 வருடங்கள் காத்தனன்

வந்தனம்மடி பேரரு ளன்னாய்
வைரவீ! திறற் சாமுண்டி ! காளி!

சிந்தனை தெளிந்தேனினி யுன்றன்
திருவருட்கென அர்ப்பணஞ் செய்தேன்

வந்திருந்து பலபய னாகும்
வகைதெ ரிந்துகொள் வாழி யடி நீ.

(மஹாகவி பாரதியார்)

 
மேலும் மகா காளி வழிபாடு »
temple news

காளீ ஹ்ருதயம் மார்ச் 07,2015

ஸ்ரீகணேசாய நம:ஓம் அஸ்ய ஸ்ரீ தக்ஷிண காளிகா ஹ்ருதய மந்த்ரஸ்ய மஹா காள ருஷி: உஷ்ணிக் சந்த: ஸ்ரீ தக்ஷிண காளிகா ... மேலும்
 
temple news
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம், க்ரீம் க்ரீம் க்ரீம் ஹூம் ஹூம் ஹ்ரீம் -  ஹ்ரீம் தக்ஷிணே காளிகே க்ரீம் - க்ரீம் ... மேலும்
 
temple news

காளிகாஷ்டகம் மார்ச் 07,2015

த்யானம்களத்ரக்த முண்டாவலீ கண்டமாலாமஹா கோரராவா ஸூதம்ஷ்ட்ரா கராளாவிவஸ்ரா ச்மசானாலயா முக்தகேசீமஹாகாள ... மேலும்
 
temple news
விநியோகஒம் அஸ்யஸ்ரீ தக்ஷிணகாளிகா கட்கமாலா மந்த்ரஸ்ய ஸ்ரீ பகவான் மஹாகாளபைரவ ருஷி: உஷ்ணிக் சந்த: சுத்த ... மேலும்
 
temple news
க்ரீம்-க்ரீம்-க்ரீம்-ஹீம்-ஹீம்-ஹூம்-ஹூம்-தக்ஷிண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar