திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள திருத்தலம் பொன்விளைந்த களத்தூர். இங்குள்ள ஸ்ரீராமர் கோயிலில் நான்கு திருக்கரங்களுடன் அருளும் ஸ்ரீராமனைத் தரிசிக்கலாம். படிக்காசுப் புலவர், அந்தகக் கவி வீரராகவ முதலியார், புகழேந்தி ஆகியோரை உலகுக்குத் தந்த பெருமையும் இந்த ஊருக்கு உண்டு.