கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாசனி தாயார் கோயிலில் கொடியேற்றம் நடந்தது. பங்குனி பிரமோத்ஸவத்தை முன்னிட்டு காலை 8:30 மணியளவில் கொடிப்பட்டம் வீதியுலாவும் சக்கரத்தாழ்வாரின் பிரகார சுற்றும் நடந்தது. வரும் ஏப். 5 முடிய மண்டகப்படி முறைப்படி பிரமோத்ஸவ விழா நடைபெறும். உற்சவர் கல்யாண ஜெகநாதப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் காலை 9:30 மணிக்கு மேல் ஜெயராம் பட்டர் தலைமையில் உப்புலி பட்டர் (துவஜா ரோகணம்) கொடியேற்றினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் மகேந்திரன், சரக அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் கண்ணன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.