ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2015 10:03
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பங்குனி திருக்கல்யாணம் விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.இதையொட்டி நேற்று காலை 8.15 மணிக்கு கருடாழ்வார் முத்திரை பதித்த கொடி மாடவீதி, ரதவீதிகளில் சுற்றி வரப்பட்டு விஜயபாஸ்கரபட்டரால் கொடிமரத்தில் ஏற்ற சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தக்கார் ரவிச்சந்திரன், கோபால்சாமி எம்.எல்.ஏ., டி.எஸ்.பி., முரளிதரன், செயல் அலுவலர் ராமராஜா உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.9ம் நாளான ஏப்.,3 ம் தேதி காலை 7 மணிக்கு செப்புத்தேரோட்டம் நடக்கிறது. அன்று இரவு 7 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. இதில் பங்கேற்க மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர்.