பதிவு செய்த நாள்
27
மார்
2015
11:03
வால்பாறை: வால்பாறை துவாரகாமாயி அறக்கட்டளை சார்பில், ஸ்ரீசாய்ஜெயந்தி முதலாம் ஆண்டு விழா நேற்று காலை, 8:30 கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடியை டாக்டர் முனுசாமி ஏற்றினார். தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில், ஒவ்வொரு நாளும், காலை, 8:00 மணிக்கு காகட ஆர்த்தி, 12:00 மணிக்கு மத்தியான ஆரத்தி, 6:00 மணிக்கு, மாலை ஆரத்தி, மாலை, 6.15 மணிக்கு துவாரகமாயிபஜன், இரவு, 8:00 மணிக்கு சிறப்பு ஆரத்தி நடக்கிறது. விழாவில் நாளை (28ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு, ஸ்ரீஷீரடிசாய் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அரு ள்பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை துவாரகா மாயி அறக்கட்டளை நிறுவனர்கள் சாய் செல்வரத்தினம், பிரவிணா உள்ளிட்டோர் செய் துவருகின்றனர்.