காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழாவில், நேற்று, நாக வாகனத்தில் ஏகாம்பரநாதர் வீதியுலா வந்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவின், 4ம் நாளான நேற்று, காலை 10:00 மணியளவில், நாக வாகனத்தில் ஏகாம்பரநாதர் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின், 10:15 மணிக்கு, ராஜவீதிகளில் ஏகாம்பரநாதர் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.