பதிவு செய்த நாள்
28
மார்
2015
11:03
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த பெருமுளை முத்தையா சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திட்டக்குடி அடுத்த பெருமுளை முத்தையா கோவிலில் பங்குனி உத்திரதிருவிழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, முத்தையா, ராயப்பா, பூமாலையப்பா மற்றும் நவŒக்தி நாயகி ஈஸ்வரி, பச்சையம்மாள் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து காலை 9:30 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சுப்ரமணியர் கோவில்: கூடலுõர் குடிகாடு கிராமத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலை விக்னேஷ்வரர், சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கொடியேற்றத் திருவிழா நடந்தது. மாலை சிறப்பு வழிபாடும், தொடர்ந்து சுவாமி திருவீதியுலாவும் நடந்தது. ஏப்ரல் 2ம் தேதி தேர் திருவிழாவும், 3ம் தேதி பங்குனி உத்திர திருவிழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.