கிஷ்கிந்தையில் ஒரு ஆண் குரங்கு கூட இல்லாமல் போனது. காரணம் என்ன தெரியுமா? அங்கிருந்த பெண் குரங்குகள், சீதையை மீட்பதில் ராமனுக்கு உதவி செய்ய விரும்பின. அதற்காக, தங்களின் தந்தை, சகோதரர், கணவர், பிள்ளைகள் எல்லாரையும் ராமனுடன் போருக்கு அனுப்பி வைத்தன. ஒரு ஆண் குரங்கு கூட அங்கில்லை. போரில் வானரங்களின் உதவியுடன், ராவணனை வென்ற ராமர், அயோத்தி புறப்பட்டார். கிஷ்கிந்தைக்கு வந்ததும், ராமனுடன் வந்த சுக்ரீவன், வானரப் பெண்களை சந்திக்க வேண்டினான். ராமரும் சம்மதித்தார். சீதா ராமரை அந்தப் பெண்கள் கண்குளிரத் தரிசித்தனர்.