அசோகவனத்தில் சீதை ராமனின் பிரிவைத் தாளாமல் உயிர் விட எண்ணி, கழுத்தில் கயிற்றால் சுருக்கிட முயன்றாள். இதைக் கண்ட அனுமன் பதறினார். சீதையைத் தடுக்கும் நோக்குடன், ராமனின் வரலாற்றை இனிய பாடலாகப் பாடினார். ‘ஹனுமதோடி’ என்னும் ராகத்தில் அப்பாடல் கேட்ட சீதை மனம் மாறினாள். அங்கிருந்த ராட்சஷிகள், அந்தப் பாடலின் இனிமையில் தங்களை மறந்து துõக்கத்தில் மூழ்கினர். இதை பயன்படுத்திக் கொண்ட அனுமன், தான் ராமனின் துõதன் என்பதை சீதையிடம் தெரிவித்தார்.