முருகனுக்கு ‘ஓம் முருகாய நம’ என்ற மந்திரம் உண்டு. இதை நக்கீரர் ‘அரும்பெயர் முருக’ என்று திருமுருகாற்றுப்படையில் குறிப்பிட்டுள்ளார். மு, ரு,க என்னும் மூன்றெழுத்துகளில் ‘மு’ என்பது முகுந்தனையும் (திருமால்), ‘ரு’ என்பது ருத்ரனையும்(சிவன்), ‘க’ என்பது கமலோத்பவன் என்னும் பிரம்மாவையும் குறிக்கும். இந்த மந்திரமே ‘முருகா’ என வழங்கப்படுகிறது. இந்த மந்திரத்தைச் சொன்னால் மும்மூர்த்திகளையும் வழிபட்ட பலன் உண்டாகும். வாழ்நாள் முழுவதும் முருக நாமத்தை ஜெபித்தவர் திருப்பரங் குன்றத்தைச் சேர்ந்த முருகம்மையார். கைகளை இழந்த அந்த அம்மைய õருக்கு, முருகனே நேரில் வந்து செய்து மீண்டும் கைகள் வளர அருள் செய்தார்.