புதுச்சேரி: துருவையில், சேரடி செங்கழுநீர் அம்மன் கோவிலில், மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. வானுார் வட்டம் துருவை கிராமத்தில், சேரடி செங்கழுநீர் அம்மன் கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா நடந்தது. இதன் தொடர்ச்சியாக 48 மண்டல அபிஷேகம் நடந்தது. நேற்று முன் தினம் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. அன்று காலை விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம் பூஜை, அனைத்து மூர்த்திகளுக்கும் கலச அபிஷேகம் நடந்தது. இரவு முருகர், விநாயகர், அம்மன் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை துருவை கிராமத்தினர் செய்திருந்தனர்.