பதிவு செய்த நாள்
30
மார்
2015
05:03
திருவாரூர்: திருவாரூர் காகிதகாரத்தெரு காசி விசாலாட்சி சமேத காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்றுப்பகுதியினர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறந்து விளங்கும் திருவாரூரில் ஆ னேறு ஏறி அமரர்நாடு ஆளாது ஆரூர் ஆண்ட அம்மன் தியாகேசன் பெருமான் கட்டளையின் 1008 சிவத்தலங்களில் ஒன்றானதும், ஈசான மூலையில் காகித காரத்தெருவில் மிகவும் பழமை வாய்ந்ததுமான காசி விசாலாட்சி சமேத காசி விசுவநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் மிகவும் சிதிலமடைந்து கிடந்தது. அப்பகுதி ஸ்ரீசீதளாதேவி நற் பணி இயக்கத்தினர் வரி வசூல் செய்து, புதிதாக முகப்பு மண்டபம் கட்டி ரூ.13 லட்சம் செலவில் புரணமைத்தனர். கும்பாபிஷேகத்திற்கான விழாவை முன்னிட்டு கடந்த 27 ம் தேதி காலை 5.30 மணிக்கு அனுக்ஞை, ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, தனபூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமங்கள் நடந்தது. மாலை 6.00 மணிக்கு வாஸ்த்து சாந்தி, ப்ரவேச பலி, ரக்ஷோக்ன ஹோமம் நடந்தது. 28 மற்றும் 29ம் தேதிகளில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. 30 ம்தேதி காலை 6.00 மணிக்கு நான்காம் கால பூஜைகள் துவங்கியது, காலை 9.00 மணிக்கு பூர்ணாஹூதி திபாராதனையுடன் கடம் புறப்பாடு துவங்கியது. காலை 9.30 மணிக்கு விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.