உலகநன்மைக்காக.. உச்சி மாகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2015 06:03
சோழவந்தான்: சோழவந்தான் பூமேட்டுதெரு உச்சிமாகாளியம்மன்,வடக்கத்திகாளியம்மன் கோயில் பங்குனி உற்சவத்தில் உலக நன்மைக்காக, மழைவேண்டி திருவிளக்குபூஜை நடந்தது. இக்கோயிலில் 5 ம் நாள் உற்சவத்தில் இரண்டு அம்மன்கள் சர்வஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று இரவு 7 மணிக்கு மேல் உலகநன்மைக்காக, மழைவேண்டி பெண்கள் பங்கேற்ற திருவிளக்குபூஜை நடந்தது. ஏற்பாடுகளை தொழிலதிபர் மணிகமுத்தையா, எம்.வி.எம்.,கலைவாணி மெட்ரிக், மேல்நிலைப்பள்ளி தாளாளர் மருதுபாண்டியன் செய்திருந்தனர். பள்ளி நிர்வாகி வள்ளிமயில் பக்தர்களுக்கு குங்குமம், திருமாங்கல்ய கயிறு பிரசாதம், அன்னதானம் வழங்கினார்.